Tamil Nadu Government: மானியம் மொத்த திட்டத் தொகையில் 35% ஆகும். மானிய உச்சவரம்பு ரூ.1.5 கோடி. இதுவன்றி, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (Annal Ambedkar Business Champions Scheme - AABCS) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகத் தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும்.
25
ஒரு கோடி வரை அரசு மானியம்
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வேலை அளிக்கும் 'தொழில் முனைவோராக' உயர வேண்டும் என்பதாகும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதே இதன் இலக்கு. இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்குத் திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது அதிகபட்சமாக ஒரு கோடி வரை அரசு மானியம் வழங்குகிறது.
35
ரைஸ் மில்
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். உணவு பதப்படுத்தல், தென்னைநார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தயாரித்தல், ரைஸ் மில், ஸ்பின்னிங் மில், மளிகை கடை வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், வாடகை கார், ஆம்புலன்ஸ், ரைஸ் மில், ஆயில் மில் உள்ளிட்ட புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, சட்டப்படியாக வரையறுக்கப்பட்டதல்லாமல், வேறெந்த கல்வித்தகுதியும் தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65% வங்கிக்கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. வயது வரம்பு 18 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் கடனுதவி பெற முடியும்.
55
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்க்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்டத் தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் மாவட்டத் தொழில் மையம் விளங்கும்.
தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி மற்றும் எஸ்.டி தொழில் முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகளுக்கு இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.