சுட்டெரிக்கும் வெயிலால் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.? ஒரு கிலோ கேரட், பீன்ஸ் என்ன விலை தெரியுமா.?

First Published May 8, 2024, 8:30 AM IST


வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக கேரட், பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 
 

வாடி வதங்கும் காய்கறிகள்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 7 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குவதால் வீட்டிற்குள்ளே மக்கள் முடிங்கி கிடக்கும் நிலை உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு சில காய்கறிகள் செடியிலேயே வாடி விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்துள்ளதால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

குறைந்தது முருங்கைக்காய் விலை

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உச்சத்தில் பீன்ஸ் விலை

கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

click me!