கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர்
இதனால் ஆளுநர் ரவியின் உரைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ரவி வெளியேறினார். எனவே இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ரவி என்ன செய்யப்போகிறார் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே எதிர்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்புவதற்கு முன்பாக ஆளுநர் ரவி என்ன செய்ய போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.