தமிழக அரசின் கல்விக்கான திட்டங்கள்
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதிலும், கல்விக்காவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆராய்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் 10ஆயிரம் ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரை வழங்கவுள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் படி "தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வு மாணக்கரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு "தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.