பயனாளிகள் தேர்வு செய்யப்படும் முறை
வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயன்களைப் பெற தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற விண்ணப்பதாரர்கள் செங்கல் மற்றும் சிமெண்டால் செய்யப்பட்ட வீடு வைத்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் விவரம்
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு 360 சதுர அடி பரப்பளவில் சமையலறையுடன் கட்டப்பட வேண்டும்.300 சதுர அடியில் சிமென்ட் கூரையாகவும், மீதமுள்ள 60 சதுர அடியில் தீப்பிடிக்காத கூரையாகவும் பயனரின் விருப்பப்படி அமைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவர் செங்கல், இன்டர்லாக் கல்லால் செய்யப்பட வேண்டும் என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை, செல்போன் எண், வாக்காளர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை, வீட்டு முகவரி போன்றவையாகும்