உருவானது புயல் சின்னம்.? சென்னையை புரட்டிப் போட காத்திருக்கும் மழை- தேதி குறித்த ஆய்வாளர்கள்

Published : Nov 21, 2024, 02:19 PM ISTUpdated : Nov 22, 2024, 07:10 AM IST

தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக வலுப்பெற வாய்ப்பு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

PREV
15
உருவானது புயல் சின்னம்.? சென்னையை புரட்டிப் போட காத்திருக்கும் மழை- தேதி குறித்த ஆய்வாளர்கள்
Rainy Season

உருவானது புயல் சின்னம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது, அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய ஊர்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டியது. இந்த நிலையில வரும் நாட்களில் மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானில் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது.

இதன் காரணமாக, வருகின்ற 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

25
Chennai Rains

மிதமான மழை

இந்த நிலையில் இன்று (21-11-2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
 

35
Tamil nadu rains

மிக கன மழை எச்சரிக்கை

நாளை முதல் வருகிற 24ஆம் தேதி முதல் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு மட்டும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  வருகிற 26-11-2024 முதல் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

 

45
Heavy Rain

மீண்டும கன மழை

27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுளைது.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

55

சென்னைக்கு புயல் எச்சரிக்கை

இதனிடையே இன்று வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் என வலுப்பெற்று இறுதியாக புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 26 ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வருகிற 28 ஆம் தேதி சென்னை அருகே புயலாக நிலைக்கொள்ளும் எனவும் அது சென்னை- புதுவை இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.  

Read more Photos on
click me!

Recommended Stories