ஏங்க...! தங்கபாண்டியின் போராட்டத்திற்கு செவி சாய்த்த தமிழக அரசு - கூமாபட்டியில் ரூ.10 கோடியில் பூங்கா

Published : Aug 28, 2025, 12:18 PM IST

கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

PREV
14
கூமாப்பட்டிக்கு விடிவுகாலம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கூமாப்பட்டி என்ற கிராமம் எங்கு இருக்கிறது? அங்கு என்ன உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் ஜீவானந்தம் தொடர்ந்து தனது கிராமத்தையும், கிராமத்தை சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் பிரபலப்படுத்தும் நோக்கில் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோகளை பகிர்ந்து வந்தார். தனித்துவமான சொல்லாற்றல், உடல்மொழி காரணமாக பெரும்பாலானோரால் விரும்பப்பட்ட தங்கபாண்டியனின் பேச்சை கேட்டு பலரும் கூமாபட்டிக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

வேலைப்பளுவா? கூமாப்பட்டிக்கு வாங்க, காதல் தோல்வியா? கூமாப்பட்டிக்கு வாங்க, நினைத்த காரியம் நடக்கவில்லையா? கூமாப்பட்டிக்கு வாங்க என அவர் கூமாப்பட்டியை தொடர்ந்து ப்ரமோட் செய்த விதம் பலரையும் வெகுவாக ஈர்த்தது. வயல்வெளிகளுக்கு நடுவே கிணற்றில் குளிப்பது, பிளவக்கல் அணையில் நீராடுவது என இயற்கை வளங்களோடு இருந்ததைப் பார்த்த பலரும் கூமாப்பட்டிக்கு படையெடுத்தனர். ஆனால் அணைப்பகுதி, அதனை அருகே அமைந்துள்ள பூங்கா உள்ளிட்டவை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சி அளித்தது.

24
ரூ.10 கோடி ஒதுக்கீடு

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரான நிலையில் பிளவக்கல் அணை அருகே உள்ள பூங்காவை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியிபடப்பட்டுள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியார் அணை பூங்காவை நவீனமயமாக்குதல், அதன் உள்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் அணுகு சாலையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான திட்ட மதிப்பீட்டை நீர்வளத் துறையின் திட்ட உருவாக்கத் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ளார். இந்த திட்டத்திற்கு ரூ.10.00 கோடி மதிப்பீட்டுச் செலவு ஒதுக்கப்பட்டுள்ளது.

34
சுற்றுலாத்தலமாகும் கூமாப்பட்டி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பிலவுக்கல் பெரியார் அணை பூங்காவும் ஒன்றாகும். இந்தப் பூங்கா தொடங்கப்பட்டதிலிருந்து பொதுப்பணித் துறை/நீர்வளத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக பெரிய அளவிலான புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் 2001-2002 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன.

44
மேம்படுத்தப்படும் பூங்கா

வனவிலங்குகள் அடிக்கடி தலையிடுவதால், பூங்காவை தற்காலிகமாக மூட வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பூங்கா பகுதியைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பூங்கா மற்றும் அணைப் பகுதியைச் சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் வேலி வசதிகளை வழங்குவதன் மூலம் பூங்கா பகுதியை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம்.

கிழவன்கொல் கிராமத்திலிருந்து அணைக்குச் செல்லும் அணுகு சாலைகள் குண்டும் குழியுமாக, கரடுமுரடாகவும், மோசமான நிலையில் உள்ளன. தற்போதுள்ள பூங்கா வசதிகளான காட்சி கோபுரம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறைகள், ஓய்வு கொட்டகை மற்றும் நிலப்பரப்புகள் போன்றவை சேதமடைந்த நிலையில் உள்ளன, அவற்றை புதுப்பிக்க வேண்டும். சுற்றுலாவை மேலும் மேம்படுத்தவும், பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், தளத்தில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories