கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழாவின்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானதுடன், மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.