மதுக்கடைக்கு விடுமுறை
ஆனால் அந்த டாஸ்மாக் கடைக்கே வருடத்தில் 8 நாட்கள் மட்டும் விடுமுறை விடப்படுகிறது. குறிப்பாக திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் முக்கிய கோயில் விழாக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாகவும் மதுக்கடைகள் மூடப்படுகிறது. அந்த வகையில், வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த, அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.