1000 பக்தர்களுக்கு இலவச பயணம்
இந்தநிலையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், கட்டணமில்லாமல் ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான விண்ணப்பப் ஏற்கனவே தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் இலவச பயணத்தின் மூலம் பயன்பெற்றனர். அதன்படி முதற்கட்டப் கந்தக்கோட்டத்திலிருந்தும், இரண்டாம் கட்டப் பயணம் சென்னை, பயணம் பழநியிலிருந்தும். மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரிலிருந்தும், நான்காம் கட்டப் பயணம் சுவாமிமலையிலிருந்தும் புறப்பட்டன. இந்த ஆன்மிகப் பயணத்தில் இதுவரை 813 மூத்த குடிமக்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.