பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். அந்த வகையில் அண்ணாமலையில் அதிரடி அரசியலால் அனைத்து அரசியல் கட்சிகளும் திருப்பி பார்த்தது. ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக தினந்தோறும் பேட்டிகள், போராட்டங்கள், ஆடியோ வெளியீட்டால் திமுகவினர், அதிர்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் தான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக, ஆனால் மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பேச்சால் பாதியிலேயே கூட்டணி உடைந்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவும் படு தோல்வி அடைந்தது.