சமாதானம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பும் தகுதிநீக்க புகார்களை வாபஸ் பெற்றன. ஆனால், இந்த சமாதானக் கூட்டத்தில் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை. இதனால் இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியாததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.