தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் இன்று அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மாத சம்பளத்துடன், உயர்த்தப்பட்ட 2% அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் மற்றும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் கடைசி நாளில் வங்கி கணக்கில் சம்பளம் வந்துவிடும்.
25
மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா?
இதற்காக ஒவ்வொரு மாத சம்பள பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேலாண்மை (IFHRMS) என்ற ஆன்லைன் மென்பொருள் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதியே தயாராகிவிடும். அதைத் தொடர்ந்து, அந்தந்தத் துறை ஊழியர்கள் அதைச் சரிபார்த்து 25-ம் தேதிக்குள் கருவூலத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் மாதத்தின் இறுதி நாளில் (30 அல்லது 31-ஆம் தேதி) அனைவருக்கும் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.
35
அகவிலைப்படி உயர்வு
ஆனால், மே மாதத்தில் கடந்த 22-ம் தேதி கடந்தும் இந்த மென்பொருளில் சம்பளப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை நீடிப்பதாகவும், இதனால் அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வருவதில் சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகின. மேலும் 2 சதவீத அகவிலைப்படியை புதிய அரசு அறிவித்தாலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதனை ஊழியர்களுக்குக் கொண்டு சேர்க்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் இன்று வெள்ளிக்கிழமை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் இந்த மாத ஊதியமானது பின்வரும் கூடுதல் பலன்களுடன் வழங்கப்படும்.
55
அகவிலைப்படி நிலுவைத் தொகை வரவு
அதாவது அரசு அறிவித்தவாறு உயர்த்தப்பட்ட 2% கூடுதல் அகவிலைப்படியுடன் (DA) இந்த மாத சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் (DA Arrears) இதனுடன் இணைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.