தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதில் பெரும்பாலான மக்கள் சொந்த ஊரில் சென்று தீபாவளிக்கு கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் இருந்து தங்கள் ஊருக்கு பயணத்தை தொடங்கியுள்ளளனர். அந்த வகையில் தமிழக அரசு பேருந்தில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் இதுவரை பயணம் செய்துள்ளனர்.