தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!

Published : Sep 30, 2025, 03:12 PM IST

Government Employee: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 3-ம் தேதியை விடுமுறையாக அறிவிக்க அரசு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

PREV
13
அரசு ஊழியர்கள்

தமிழகத்தில் விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்து விட்டால் சொல்லாவ வேண்டும். இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி புதன் கிழமை ஆயுத பூஜை, 2-ம் தேதி வியாழக்கிழமை விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேலை நாளாக உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 4,5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்களாகும். எனவே, அக்டோபர் 3-ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

23
முதல்வர் ஸ்டாலின்

அதன்மூலம், தசரா பண்டிகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊரில் கொண்டாடி விட்டு திங்கள்கிழமை பணிக்கு வருவார்கள். எனவே, அக்டோபர் 3-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

33
5 நாட்கள் விடுமுறை

இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர். ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories