விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த உதவியைப் பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு முறை மட்டுமே நிதி உதவி பெறலாம்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வருமானச் சான்றிதழ், மதச் சான்றிதழ், வயது சான்று மற்றும் பயண விவரங்கள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலகமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 30.11.2025