குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனார். இவரின் மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொத்தனாரின் மகள், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் தந்தை மகளை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார்.