இதனால் ஆத்திரமடைந்த பூமணி, சின்னப்பராஜை பலமாக தாக்கி ஓடைக்குள் தள்ளிவிட்டுள்ளார். தலையில் அடிபட்டு, படுகாயமடைந்த சின்னப்பராஜ் மயங்கி விழுந்தார். அப்போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சின்னப்பராஜ் உடல் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் அலறியபடி அங்கிருந்து சுமார் 50 அடி தூரம் உயிருடன் ஓடிய சின்னப்பராஜ் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற பூமணி, அதிகாலை அவினாசி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னப்பராஜின் சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.