முதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்! உருகிய எடப்பாடி! உ.பி.க்கள் நெகிழ்ச்சி!

Published : Jul 21, 2025, 07:00 PM ISTUpdated : Jul 21, 2025, 07:01 PM IST

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

PREV
14
Edappadi Palaniswami Prays For CM MK Stalin's Speedy Recovery

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ''வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றுல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடல்நிலை பாதிப்புகளை கண்டறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது'' என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

24
மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் திமுகவின் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது இருவரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார்'' என்று தெரிவித்தனர்.

34
ஸ்டாலின் குணமடைய எடப்பாடி பிரார்த்தனை

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரித்துள்ளார். 

மன்னார்குடியில் ''மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'' பேரணியில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இன்றைய தினம் நான் வரும்போது எனக்கு கிடைத்த செய்தி. திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

44
அரசியல் மாண்பை நிரூபித்த எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் கீரியும், பாம்புமாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த இரண்டு கட்சிகளும் தான் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி ஆட்சியை பிடித்து வருகின்றன. இப்போதும் அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியையும் முதல்வர் ஸ்டாலினும், திமுகவையும், ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசாமியும் அரசியல்ரீதியாக சராமரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் குணமடைய தான் கடவுளை வேண்டுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தமிழகத்தின் அரசியல் மாண்பை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

திமுக உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி

என்னதான் அரசியல்ரீதியாக இருவரும் ஒருவவரை ஒருவர் வசைபாடினாலும், அரசியல் வேறு, தனிப்பட்ட விஷயம் வேறு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டதாக அதிமுக கட்சியினர் மட்டுமின்றி திமுக உடன்பிறப்புகளும் நெகிழ்ந்து பேசி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories