ஓபிஎஸ்க்கு மீண்டும் வாய்ப்பு இல்லை
மீண்டும் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார், பிரிந்தது பிரிந்தது தான். அதிமுக தொண்டர்களின் கோவிலாக இருக்கின்ற தலைமை கழகத்தை ரவுடிகளை கொண்டு எப்பொழுது உடைத்தார்கள்களோ அன்றைக்கே அவர்கள் அந்த கட்சியில் இருப்பதற்கு தகுதியில்லாதவர்கள் என கூறினார். எனவே மீண்டும் ஓபிஎஸ் இணைக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. கூட்டணி அமைக்கப்படும் பொழுது பத்திரிகையாளர்கள் அழைத்து தகவல் கொடுக்கப்படும் என கூறினார்.