EPS ADMK : அமைச்சரவையில் இடம் கேட்ட அன்புமணி! ஒரே வார்த்தையில் முடித்த இபிஎஸ்! சைலண்ட் மோடில் பாமக!

Published : Jul 17, 2025, 09:45 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணி உருவாக்கத்தில் ஆட்சியில் பங்கு கோரிக்கை வலுத்து வருகிறது. பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தெளிவான பதில் அளிக்காமல் உள்ளார்.

PREV
14
தேர்தலுக்கு களம் இறங்கிய அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணி நிலவரங்களை ஆராய்ந்து வருகிறது. செயல்வீரர்கள் கூட்டம், வாக்குசாவடி முகவர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க 200 தொகுதிகளை இலக்காக கொண்டு காய் நகர்த்துகிறது.

 இதனை முறியடிக்க அதிமுகவும் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

24
ஆட்சியல் பங்கு கேட்கும் கட்சிகள்

அடுத்தாக தேமுதிக, பாமகவிற்கும் தூது விட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் தவெகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யோ 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறார். எனவே பாமக மற்றும் தேமுதிகவை நம்பியே அதிமுக உள்ளது. அதே நேரம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தமிழகத்தில் தற்போது வலுத்து வருகிறது. 

ஏற்கனவே நடிகர் விஜய் தங்களோடு கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம் என அறிவித்துள்ளது. இதே போல பாஜகவும் அதிமுக ஆட்சியில் பங்கு என மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி ஆட்சி என எந்த உறுதியும் அக்கட்சிகளுக்கு கொடுக்காமல் நழுவி வருகிறார்.

34
ஆட்சியில் பாமகவிற்கு பங்கு

இந்த சூழ்நிலையில் பாமக தலைவராக உள்ள அன்புமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், 'சமூக நீதி, மக்கள் உரிமைகளுக்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ் மொழி, இனம், தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமெனில், பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும். 

தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால், தமிழகத்தை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும்கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தை கூட்ட, அனைவரும் உறுதியேற்போம்' என்று தெரிவித்திருந்தார்.

44
அன்புமணிக்கு இபிஎஸ்

இந்த சூழ்நிலையில் தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மீண்டும் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என உறுதியாக கூறி வருகிறார். இதனிடையே அன்புமணியின் அமைச்சரவையில் பங்கு தொடர்பாக அறிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், 

சார், அவங்க வந்தா பாத்துக்கலாம் விடுங்க. ஏங்க, பந்தியிலயே உக்கார வைக்கல, இலை ஓட்டை என்றால் என்ன பண்ணுவது? என தக்லைப் பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரம் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆட்சியில் பங்கு கருத்திற்கு பதில் அளித்துள்ளார். அதில் ஆட்சியில் பங்கு' என்று அன்புமணி கூறியது அவரது சொந்தக் கருத்து' என கூறி எண்ட் கார்டு போட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories