இன்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகிலும், மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகிலும், இரவு 7.45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலில் பேசுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அலைக்கடலென தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.