மேலும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினரும் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதுடன், அதனை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்தது. மேலும் சிறப்பு புலனாய்வு விசாரணை மற்றும் தமிழக அரசின் ஒரு நபர் ஆணைய விசாரணை ஆகியவற்றுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் கரூர் சம்பவத்துக்கு காரணமான தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ''அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. ஆனால் தவெக கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்று உயிரிழந்துள்ளனர்.