செப்டம்பர் 14 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
இதனிடையே இந்த தேர்வுகள் நாளை தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிதாக வெளியிடப்பட்ட திருத்திய நாள்காட்டி பட்டியலின் படி பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் செயல்படுமா என கேள்வி எழுந்திருந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்தநிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வுகள் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதால் பள்ளிகளுக்கு நாளை செப்டம்பர் 14ஆம் தேதி விடுமுறை அறிவித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை மிலாது நபி விடுமுறை என தொடர்ந்து கிடைப்பதால் வெளியூர் பயணத்திற்கு தயாராகியுள்ளனர்.