கிரிவலம் செல்ல உகந்த நேரம்
எனவே இந்த புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன் படி புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16-ந்தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் வியாழக்கிழமை 17-ந்தேதி மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது. இது கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இ
தனையடுத்து புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு வசதியாக, சேலம் புறநகர் பேருந்து நிலையம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு பேருந்து நிலையங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களும் கிரிவலம் செல்ல தயாராக இருந்தனர்.