கிடு,கிடுவென உயர்ந்த நீர்
மேலும் மேட்டூர் அணையின் 120 அடி நீர்மடத்தில் தற்போது 92 அடியாக உள்ளது பவானிசாகரில் 105 அடி கன நீர்மட்டத்தை தற்போது 88.31 அடி கன அடி நீர்மட்டம் உள்ளது. சென்னையின் நீர் ஆதாரமான ஏரிகளில் இரண்டு நாள் கன மழையில் புழல் ஏரி, வீராணம், தேர்வாய் கண்டிகையில் 50 சதவீதத்துக்கு மேல் கொள்ளளவு எட்டியுள்ளது.
குறிப்பாக தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பூண்டி 11.30% கொள்ளளவு எட்டியுள்ளது. புழல் ஏரி 69.73% கொள்ளளவு எட்டியுள்ளது. சோழவரம் ஏரி 13.78% கொள்ளளவு எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 35.06% கொள்ளளவு எட்டியுள்ளது கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை 60.60% கொள்ளளவு எட்டியுள்ளது. வீராணம் ஏரி 70.59% கொள்ளளவு எட்டியுள்ளது