Dmk vs Congress: மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவை சரமாரியாக விமர்சித்தது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தவெகவை வைத்து திமுகவை பயமுறுத்தியதும் அவருக்கு பிடிக்கவில்லை.
தமிழக தேர்தல் திருவிழா நெருங்கி விட்டதால் ஆளும் கட்சியான திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்ப்பின்போது திமுகவின் கனிமொழி, காங்கிரசின் சிங் தியோ ஆகியோர் உடன் இருந்தனர்.
25
21 தொகுதிகள் தான் தர முடியும்
அப்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திமுக தரப்பு 'கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் சீட் கொடுக்க வேண்டியதுள்ளது. ஆகவே 21 தொகுதிகள் தர முடியும்' என்று கறாராக சொல்லி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
35
திமுகவுக்காக தியாகம் செய்யும் கூட்டணி கட்சிகள்
திமுகவை பொறுத்தவரை தனியாக 160 தொகுதிகளுக்கு மேல் நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. 'பாஜக கூட்டணியை வீழ்த்துவதே நமது இலக்கு. அதற்காக சில தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும்' என கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்து விட்டது. இதை விசிக, இடது சாரிகள், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் காங்கிரஸ் மட்டும் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலில் 28 தொகுதிகள் கொடுக்க முன்வந்த திமுக
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இத்துடன் சேர்த்து 3 தொகுதிகள் கூடுதலாக கொடுக்கலாம் என திமுக தரப்பு முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் என்பது மட்டுமின்றி ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்டது திமுகவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
மேலும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவை சரமாரியாக விமர்சித்தது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தவெகவை வைத்து திமுகவை பயமுறுத்தியதும் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவுப்படுத்திய ஸ்டாலின், மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்த பேச்சுவார்த்தை என உறுதியாக காங்கிரசிடம் கூறியிருந்தார்.
55
தேமுதிக இருக்கும்போது காங்கிரஸ் எதற்கு?
ஆனால் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ், அவரது வாய்க்கு பூட்டு போட்டு ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என இறங்கி வந்தது. எனினும் 21 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி தர முடியாது. ராஜ்ய சபா சீட்டும் இல்லை என உறுதியாக தெரிவித்துள்ள திமுக, 'விருப்பம் இருந்தால் கூட்டணியில் இருங்கள். இல்லாவிடில் வெளியேறுங்கள்' என்ற முடிவுக்கு வந்து விட்டதாம்.
தேமுதிக கூட்டணிக்கு வந்து விட்டதால் இனி காங்கிரஸ் தேவையில்லை என திமுக நினைக்க ஆரம்பித்து விட்டதாகவும், கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுகவுடன் காங்கிரஸ் இருக்குமா? இல்லை தவெகவுடன் செல்லுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.