கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 40 பேர்கள் பலியாகினர். இந்த துயர சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வாக்குவாதமும் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம், நிகழ்ச்சிக்கு முன்பே கூட்டத்திற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பூர்த்தி செய்ததாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
24
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
அப்போது நிகழ்ந்த கூட்ட நெரிசல், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் எண்ணிக்கையை மீறியதால் கட்டுப்பாடுகள் மீறப்பட்டன என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கரூர் துயர சம்பவம் அரசியல் விவாதங்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏற்பாடுகள் குறித்த புதிய விதிமுறைகளை மீண்டும் பரிசீலிக்க வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
34
தவெக ஐடி விங் மோதல்
இந்த சம்பவம், அரசியல் கட்சிகளின் பொது நலத்திற்கான பொறுப்பை நினைவூட்டும் நிகழ்வாகவும், மக்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசியல் பொறுப்பு போன்ற முக்கிய அம்சங்களை மீண்டும் சுட்டிக்காட்டும் ஒரு முன்மாதிரியாகவும் உள்ளது.
திமுக ஐடி விங் சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், குறிப்பிட்ட அரசியல் கட்சி கூட்டத்திற்கு அவர்கள் கேட்ட இடத்தையே, காவல்துறை அனுமதி அளித்தது. குறிப்பிடப்படும் இதர இரண்டு பகுதிகள் இதைவிட குறுகலானவை. மேலும் அனுமதி கோரிக்கையில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்ட நிலையில். கூடுதலாக கூட்டப்பட்ட கூட்டத்தால் இந்த பெருந் துயரம் ஏற்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.