இந்த தேர்தல் முடிவிற்கு பிறகு, அதிமுகவை கைப்பற்ற களம் இறங்கினார் சசிகலா. அதிமுகவை கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார். இதற்கு எடப்பாடியும் பதிலடி கொடுக்க தொடங்கினார். முன்பை விட வேகமாக அரசியல் செய்ய தொடங்கினார். அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்,
முதல் ஆளாக குரல் கொடுக்க தொடங்கினார். இதனை பார்த்த பின்னர் தான் மற்ற கட்சிகளும் விழித்துக்கொண்டது. நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு சென்ற எடப்பாடி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துமனையில் மருந்து இல்லை, காவல் துறை கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளவில்லையென ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார்.