Government Employee Diwali Bonus: தீபாவளி போனஸ்! அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் எப்போது வரவு? வெளியான தகவல்!

First Published Oct 13, 2024, 7:08 PM IST

Tamil Nadu Government Employee Diwali Bonus: தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் ஊழியர்களின் வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி உற்பத்தித்துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது.

தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும், உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023 - 24ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Heavy Rain in Chennai: அதி கனமழை எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?

Latest Videos


திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000 என்பதை தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2023 - 24ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

அதன்படி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:  TNPSC: அதெல்லாம் வதந்தி! யாரும் நம்பாதீங்க! குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கொடுத்த முக்கிய தகவல்!

இதேபோல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு 3 சதவீதம் போனஸ் வழங்கப்படும். இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும். இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400ம் அதிகபட்சமாக ரூ.16,800ம் பெறுவர். 

மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகை ஊழியர்களுக்கு எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனஸ் தொகை இந்த வாரம் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!