அதாவது இலங்கை அருகே உருவாகும் டித்வா புயல் சென்னை நோக்கி வரும். சென்னை அருகே கரையை கடக்குமா, கடலிலேயே நீடிக்குமா என இனிதான் தெரியும். நவம்பர் 29ம் தேதி நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் மிக கனமழையும், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.