இந்நிலையில், அன்புமணியின் இந்த நடைபயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ், காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அன்புமணியின் நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை அடுத்து, தமிழக டிஜிபி, அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.