வட தமிழ்நாட்டின் வடகோடி பகுதிகளில் மழை மேகங்கள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் (#KCCT) மற்றும் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பதிவாகும். கடலோரத்தின் ஒரிரு இடங்களில் மிக கனமழை பதிவாக கூடும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் வரக்கூடிய 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.