தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடர்ந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழையை கொடுக்காமல் தமிழகம் முழுவதும் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டம், டெல்டா மாவட்டம், வட மாவட்டங்களிலும் மழையானது கொட்டி வருகிறது. '
அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில இரு திடங்களாக மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.