அதாவது நேற்று முன்தினம் காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 26 ம் தேதி (இன்று) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் (மோன்தா) வலுமவடையும் என்று கூறப்பட்டு இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்
இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை மோன்தா புயலாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி வாக்கில் தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும்.