கரையை கடந்த புயல்
நேற்று இரவு புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது அதன் படி ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு பலத்த காற்றோடு கரையை கடந்தது. இது தொடர்பாக தென்மன்டல் வானியை அய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், நேற்று மாலை 5.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் இரவு 10.30 மணி முதல் 11.30 வரை முழுமையாக கரையை கடந்தது.
இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் ஒரே இடத்தில் உள்ளது.