மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் இருக்க வேண்டும், ஆண்டுக்கு 3,600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் தகுதியுடையவை என தெரிவிக்கப்பட்டிருந்தது. கைம்பெண்கள், திருநங்கைகள், மற்றும் தனித்த பெண்கள் தலைமையிலான குடும்பங்களும் தகுதி பெறலாம் என கூறப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள் தகுதியற்றவை என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.