சென்னை அயனாவரம் பி.இ. கோவில் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (20). கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதேபோல் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நித்தின் சாய் (19). சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். அதேபோல் சந்துரு, எட்வின், சுதன், பிரணவ் ஆகிய 4 பேரும் கல்லூரி மாணவர்கள். இந்நிலையில், திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை, வெங்கடேஷ் ஒரு தலையாக காதலித்து வந்தது மட்டுமல்லாமல் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.