அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000த்தை ரூ.2,000ஆக உயர்த்தி அதற்கான காசோலைகளையும், தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் கருணை கொடை ரூ. 2,000க்கான காசோலைகளையும் இன்று வழங்கினார். இதன் மூலம் துறை நிலையிலான மற்றும் தொழிலாளர் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,069 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 796 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் 6,894 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 4,893 தினக்கூலி/தொகுப்பூதிய பணியாளர்கள் ஆக மொத்தம் 11,787 பணியாளர்களுக்கும், 3,865 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 15,652 நபர்கள் பொங்கல் கருணைக் கொடை பெற்று பயனடைகின்றனர்.