ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து மக்கள் குவித்து வருகிறார்கள். ராமேஸ்வரத்தை சுற்றி பல ஆன்மிக இடங்களும், அழகிய கடற்கரை, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி என ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது.
இதனை பார்க்கவே கூட்டம் கூடி வருகிறது. இந்த நிலையில் பாம்பன் ரயில் பாலம் பணி முடிவடைந்துள்ள நிலையில், ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேர ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து பகல் நேர ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.