இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ? அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. எனவே, இந்த புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.