இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் விவசாய செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த மையங்கள் வழியாக, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கருவிகளை வாங்கும் செலவைக் குறைத்து, குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெளிச்சந்தை வாடகையை விட குறைவான வாடகைத் தொகை வேளாண் இயந்திரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் மூலம் வேளாண்மையில் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் துணைக் கருவிகள், குறிப்பாக டிராக்டர்கள், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகக் குறைந்த அளவிலான வாடகையில் வழங்கப்படுகின்றன.