இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.