கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த முடியாது என்று கூறி உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த பருவமழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து அவற்றின் ஈரப்பத அளவு உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி ஆணை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார்.
24
மெட்ரோ திட்டத்தை தொடர்ந்து நெல் கொள்முதல் விவகாரம்
முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு.
34
தமிழ்நாட்ன் குரல் பிரதமருக்கு கேட்காதது ஏன்..?
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
வேளாண் மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.