இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் எப்போது விசாரணையை தொடங்குவார்கள் என கேள்வி எழுந்தது. அந்த வகையில் கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், விசாரணை நடத்த கரூர் வந்தடைந்துள்ளார்.
பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ்குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கரூர் வந்துள்ளனர். இந்த நிலையில் கரூர் வந்துள்ள சிபிஐ அதிகாரிகளிடம் எஸ்.ஐ.டி வசம் உள்ள கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனையடுத்து இன்றே தங்களது விசாரணையை சிபிஐ தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.