கரூர் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி இருந்தனர்.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை
இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.நிர்மல்குமார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேற்கண்ட 3 பேரும் இன்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
காலையில் இருந்து மாலை வரை நடைபெற்ற விசாரணையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.நிர்மல்குமார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கிடுக்குபிடி கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.