சிறை தண்டனை, அபராதம்
ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடையானது நீண்ட காலமாக உள்ளது. இது தொடர்பாக பெரும்பாலான மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. ஆனால் சிலர் விதிகளை மீறி பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணியருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.
அந்த வகையில் முதல் முறையாக பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் கொண்டு செல்லும் போது பிடிபட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். என எச்சரித்துள்ளனர்.