எரிபொருள் விலைகள் உயர்ந்தும், உதிரிபாகங்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தும், ஆண்டு தோறும் ரூ.6,600 கோடி நிதி வருவாய் குறைவாக இருப்பினும், அரசின் மாபெரும் உதவியால் இந்த சேவைகள் இயல்பாக நடைபெற்று வருகின்றன. பொதுப்போக்குவரத்திற்கான அரசின் உறுதிபாட்டினால், மகளிருக்கான விடியல் பயணம் திட்டம், மாணவர்களுக்கு பேருந்து பயணச் சலுகை, பல்வேறு பயணப் பிரிவுகளுக்கான கட்டணச் சலுகைகள் போன்ற நலத்திட்டங்கள் மூலமும், டீசல் கூடுதல் கட்டணத்திற்கான மானியம், செயல்திறன் மானியம் போன்ற உதவிகளும் அரசினால் வழங்கப்படுகின்றன.