TN Transport Department: இனி அரசு பேருந்துகளில்! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

First Published Sep 21, 2024, 9:29 AM IST

Tamilnadu Transport Department: நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் புதிய முயற்சியாக சரக்கு போக்குவரத்து சேவையில் இறங்குகிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவை வழங்கப்படும்.

Government bus

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்ந்து வருவதால், நஷ்டமும் அதிகரித்தபடியே உள்ளது. அப்படி இருந்த போதிலும் மகளிருக்கு இலவச பேருந்து, முதியோர்களுக்கு இலவச பாஸ், மாணவர்களுக்கு இலவச பயணம் என திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நஷ்டங்களை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த ஊர்தி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. 
இந்நிலையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்க உள்ளது. 

Government bus

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்து கழகங்கள் (STUs), எட்டு கோட்டங்களின் 26 மண்டலங்கள் மூலம், 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன. இவ்வாறு இயங்கும் பேருந்துகள் தினமும் 82 லட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து, சுமார் 1.75 கோடி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. 1,000 மக்கள் தொகையுள்ள கிராமங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை வழங்கி, 2018 ஜனவரியில் அமல் செய்யப்பட்ட கட்டண திருத்தத்திற்குப் பிறகும் அதே கட்டணத்தில் சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. 

இதையும் படிங்க: TN Government Bus: இரவு 10 மணிக்கு மேல் வரும் பயணிகளுக்கு குஷியான செய்தி! போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!

Latest Videos


Government bus

எரிபொருள் விலைகள் உயர்ந்தும், உதிரிபாகங்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தும், ஆண்டு தோறும் ரூ.6,600 கோடி நிதி வருவாய் குறைவாக இருப்பினும், அரசின் மாபெரும் உதவியால் இந்த சேவைகள் இயல்பாக நடைபெற்று வருகின்றன. பொதுப்போக்குவரத்திற்கான அரசின் உறுதிபாட்டினால், மகளிருக்கான விடியல் பயணம் திட்டம், மாணவர்களுக்கு பேருந்து பயணச் சலுகை, பல்வேறு பயணப் பிரிவுகளுக்கான கட்டணச் சலுகைகள் போன்ற நலத்திட்டங்கள் மூலமும், டீசல் கூடுதல் கட்டணத்திற்கான மானியம், செயல்திறன் மானியம் போன்ற உதவிகளும் அரசினால் வழங்கப்படுகின்றன.

பாரம்பரிய கட்டண வருவாயைத் தவிர, அரசுப் போக்குவரத்து கழகங்கள் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த பல்வேறு இதர வருவாய் திட்டங்களை மேற்கொள்கின்றன. இதற்காக டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை மையங்களை நிறுவுதல், பேருந்துகளில் விளம்பரம் மேற்கொள்ளல், கட்டிடங்களை வாடகைக்கு விடுதல், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல், சில செயல்பாடுகளை வெளியாட்கள் மூலம் மேற்கொள்ள ஒப்படைத்தல் போன்ற மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க:  Tamilnadu Government Buses: அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம்! புது பிளானோடு களத்தில் இறங்கி அசத்தல்!

இது மட்டுமன்றி, அரசு தற்போது பேருந்துகளில் உள்ள பொருள்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் இடங்களில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி, பொருள் போக்குவரத்து தொழிலுக்குள் நுழைவதற்கு முடிவு செய்துள்ளது. அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் பொருள்களை சேமித்து வைக்கவும், இந்த முயற்சி பொது-தனியார் கூட்டுத் திட்ட (PPP) முறைமையில் அமல்படுத்தப்படும். இது அரசுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் வருவாய் பகிர்வு அல்லது பிற வணிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படும்.

இந்த முயற்சியின் திறனையும் சாத்தியமையும் மதிப்பீடு செய்ய ஆலோசகரை நியமித்து, பின்னர் ஆர்வமுள்ள நிறுவனங்கள் பங்கேற்பதற்கான கோரிக்கை (RFP) தயாரித்து, உரிய பொருள் போக்குவரத்து கூட்டாளரைத் தேர்வு செய்வதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் இந்த பொருள் போக்குவரத்துத் தொழிலைச் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தை மேற்கொள்ள, அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் புதிய வருவாய் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நீண்ட காலப் பொதுப் போக்குவரத்து சேவைகளை நிலைத்துவமாக்கும்.

click me!