கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தில் இரவு கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவை முடித்துவிட்டு நள்ளிரவு அதே கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகியோர் டீக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கார் மணவாளர்நல்லூரில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் இருந்த புளி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.