இதன்படி, 10 கோடி ரூபாய் வரையிலான புதிய மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் தொடங்கப்படும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொழில்களுக்கு (சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அட்டவணைப்படி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இதற்கான, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிக அளவில் விண்ணப்பங்களைப் பெற, திட்டம் குறித்த விழிப்புணர்வினைப் பெருமளவு எற்படுத்துமாறு அனைத்து மாவட்ட வேளாண் விற்பனைத்துறை அலுவலர்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில்கள் இத்திட்டத்தில் வேளாண்/தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.